இணைய வழி ‘தலை’யிடியும் – ‘சட்ட ஏற்பாடு’ எனும் தைலமும்!

'நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்' எனப்படும் இணையம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது நேற்று (03) நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 14 நாட்களுக்குள் (நேற்றிலிருந்து) உயர் நீதிமன்றம் செல்வதற்கு அவகாசம் உள்ளது.

Continue Readingஇணைய வழி ‘தலை’யிடியும் – ‘சட்ட ஏற்பாடு’ எனும் தைலமும்!

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

" இலங்கை சர்வதேசத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கின்றது, (நிகழ்நிலை ) இப்படியான சட்டங்களை இயற்றினால் அடுத்து தூக்கு மேடைதான் …." - என்று எதிரணி பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Continue Readingநிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

” நீதிபதி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது”

“ முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது. எனவே, இது விடயம் தொடர்பான பொறுப்பை அரசின் கணக்கில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டாம்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Reading” நீதிபதி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது”

‘நிதி ஒதுக்கீடு’ – 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு!

2024 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேபோல அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Continue Reading‘நிதி ஒதுக்கீடு’ – 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு!

நீதித்துறைக்கே இந்நிலைமை என்றால்…?

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

Continue Readingநீதித்துறைக்கே இந்நிலைமை என்றால்…?

” தேர்தலை இழுத்தடிப்பது மனித உரிமை மீறலாகும்”

" உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மனித உரிமை மீறலாகும். எனவே, அத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்." - என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Continue Reading” தேர்தலை இழுத்தடிப்பது மனித உரிமை மீறலாகும்”

IMF இரண்டாம் கட்ட கடன் தாமதமாகலாம்

" இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்க முடியாது. ஏனெனில் இலங்கை விதிக்கப்பட்ட இலக்குகளின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் கால தாமதமாகலாம்."

Continue ReadingIMF இரண்டாம் கட்ட கடன் தாமதமாகலாம்

பாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

Continue Readingபாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

'சூப்பர் மார்க்கெட்' வலையமைப்பொன்றுக்கு உரித்தான பொரளை பகுதியிலுள்ள கிளையொன்றுக்கு கடந்த 22 ஆம் திகதி சென்றிருந்த யுவதியொருவர், ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது பரவியுள்ளது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் மாறியது. தாக்குதல் நடத்திய 4 பெண் ஊழியர்களும், மூன்று ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

Continue Reading“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடிவு…

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேற்படி சட்டமூலங்களை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - என்று முன்னாள் அமைச்சரான சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Continue Readingபயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடிவு…