“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

'சூப்பர் மார்க்கெட்' வலையமைப்பொன்றுக்கு உரித்தான பொரளை பகுதியிலுள்ள கிளையொன்றுக்கு கடந்த 22 ஆம் திகதி சென்றிருந்த யுவதியொருவர், ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது பரவியுள்ளது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் மாறியது. தாக்குதல் நடத்திய 4 பெண் ஊழியர்களும், மூன்று ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

Continue Reading“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

இலங்கையும் பொறுப்புகூறலும்…!

இலங்கைத் தீவு இன்று இப்படி மோசமான நிலைக்குப் போய் இருக்கின்றது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது - பொறுப்புக் கூறல் என்ற கடப்பாடு இங்கு இல்லாதமைதான். தேசிய இனப் பிரச்சினையில் இருந்து நாட்டைச் சீரழித்திருக்கும் பொருளாதார நெருக்கடி வரை அனைத்துக்கும் அதுவே காரணம். அதுதான் மிகப் பிரதான காரணம்.

Continue Readingஇலங்கையும் பொறுப்புகூறலும்…!

திலீபன் நினைவேந்தல் பேரணியும் – பொலிஸாரின் பாராமுகமும்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த திலீபன் எனப்படும் ராசையா பார்த்திபனின் நினைவாக பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம்வரை பயணித்துக்கொண்டிருந்த வாகன பேரணிமீது கடந்த 17 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Continue Readingதிலீபன் நினைவேந்தல் பேரணியும் – பொலிஸாரின் பாராமுகமும்

திருமலை சம்பவம் நல்லிணக்கத்துக்கு சாபக்கேடு!

" இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து வாகன பேரணியை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை உடனடியாக கைது செய்து, அவருக்கு எதிராக வழங்கு தொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

Continue Readingதிருமலை சம்பவம் நல்லிணக்கத்துக்கு சாபக்கேடு!

சனல் – 4 குண்டும் – தோல்வியடைந்த இலங்கையும்!

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது. இவ்வாறு போர் முடிவடைந்திருந்தாலும் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய வடக்கில் உள்ள தாய்மார் இன்னும் போராடிவருகின்றனர். இலங்கையில் நீண்ட நாட்கள் நடைபெற்றுவரும் போராட்டம் இதுவாகும்.

Continue Readingசனல் – 4 குண்டும் – தோல்வியடைந்த இலங்கையும்!

ஜெனிவா தொடரில் எதிரொலித்த ’13’!

சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இம்முறைக் கூட்டத் தொடரில், இலங்கை ஆட்சியாளர்களின் அதிகாரப் பகிர்வு தொடர்பான சாதகமான அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Continue Readingஜெனிவா தொடரில் எதிரொலித்த ’13’!

மனித உரிமைகள் பேரவைமீதும் தமிழர் தரப்பு நம்பிக்கை இழப்பு

'இலங்கையில் நிலவும் மனித உரிமைகள்’ குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் நலனை மையப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை, தாங்கள் கைவிடப்பட்டுள்ளோம் என போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கருதுகின்றனர்.

Continue Readingமனித உரிமைகள் பேரவைமீதும் தமிழர் தரப்பு நம்பிக்கை இழப்பு

பொலிஸ், காணி அதிகாரங்களை பகிர்வதால் நாடு பிளவுபடாது! அரசமைப்பை ஆதாரம்காட்டி சந்திரிக்கா வாதம்!!

" தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப்போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." என்று அழைப்பு விடுத்துள்ளார் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார்.

Continue Readingபொலிஸ், காணி அதிகாரங்களை பகிர்வதால் நாடு பிளவுபடாது! அரசமைப்பை ஆதாரம்காட்டி சந்திரிக்கா வாதம்!!

‘கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி’ – சர்வதேச விசாரணை கோரப்படுவது ஏன்?

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி அகழ்வுப்பணி நேற்று இரண்டாம் நாளாகத் தொடர்ந் திருக்கின்றது. நேற்றைய அகழ்வின்போது ஒரு சில மேலதிக மனித எலும்புக்கூடுகள் இனம் காணப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சன்னங்கள் என்று சந்தேகப்படும் ஒரு சில உலோகத்துண்டுகளும் வேறு சில தடயப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணி இன்றும் தொடர இருக்கின்றது.

Continue Reading‘கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி’ – சர்வதேச விசாரணை கோரப்படுவது ஏன்?

ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தாத அரசுக்கு  IMF இன் ஆசி கிட்டுமா?

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காக இலங்கைவரும் இக் குழுவினர் 27 ஆம் திகதிவரை தங்கியிருப்பார்கள்.

Continue Readingஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தாத அரசுக்கு  IMF இன் ஆசி கிட்டுமா?