‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு

காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. எனினும், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 45 நாடுகள் ஆதரவு வழங்க மறுத்து, நடுநிலை வகித்துள்ளன.

Continue Reading‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு

சீன ஆய்வு கப்பலின் வருகை – இலங்கை வெளிவிவகாரக் கொள்கை குறித்து கடும் விசனம்

ஷி யான் – 6 (Shi Yan 6) என்ற சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Continue Readingசீன ஆய்வு கப்பலின் வருகை – இலங்கை வெளிவிவகாரக் கொள்கை குறித்து கடும் விசனம்

ஜனாதிபதி தேர்தலுக்காக ரூ.10 பில்லியன் கோருகிறது தேர்தல் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Continue Readingஜனாதிபதி தேர்தலுக்காக ரூ.10 பில்லியன் கோருகிறது தேர்தல் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடக்கும்?

" உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு நிதி வழங்காமல் இருந்ததுபோல ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முற்பட்டால் நாட்டில் அராஜக நிலையே தோற்றம் பெறும். " - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Continue Readingஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடக்கும்?

2024 இல் மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமா அரசு?

" 2024 இல் மக்கள் நீதிமன்றம் முன்னிலையில் அரசு கட்டாயம் முன்னிலையாக வேண்டும். தம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

Continue Reading2024 இல் மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமா அரசு?

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்

பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது சந்தேகநபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

Continue Readingபொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்

சமூக வலைத்தளங்களை ஒடுக்காது – டிஜிட்டல் வரியை அறிவிடுமாறு யோசனை முன்வைப்பு

" வடக்கு ஆயுதக்குழுவால்கூட செய்ய முடியாமல்போன விடயத்தை இளைஞர்கள் 'ஸ்மார்ட்' போன் ஊடாக செய்து காட்டினார். இதற்கு அஞ்சியே சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது." - என்று குடியரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Continue Readingசமூக வலைத்தளங்களை ஒடுக்காது – டிஜிட்டல் வரியை அறிவிடுமாறு யோசனை முன்வைப்பு

பொலிஸ்மா அதிபருக்கான சேவை நீடிப்பு சட்டப்பூர்வமானதா?

பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சபையில் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டன.

Continue Readingபொலிஸ்மா அதிபருக்கான சேவை நீடிப்பு சட்டப்பூர்வமானதா?

‘முல்லைத்தீவு நீதிபதிக்கு சட்டா அதிபர் தரப்பில் அழுத்தம் இல்லை’ – விசாரணை அறிக்கை முன்வைப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு சட்டமா அதிபரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான தகவலாகும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Reading‘முல்லைத்தீவு நீதிபதிக்கு சட்டா அதிபர் தரப்பில் அழுத்தம் இல்லை’ – விசாரணை அறிக்கை முன்வைப்பு

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்? நீதி அமைச்சர் வழங்கியுள்ள விளக்கம்

" நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Readingநாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்? நீதி அமைச்சர் வழங்கியுள்ள விளக்கம்