‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. எனினும், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 45 நாடுகள் ஆதரவு வழங்க மறுத்து, நடுநிலை வகித்துள்ளன.