” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது (TRC) சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (11) உரையாற்றிய அவர், ” 2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில்தான் மிக மோசமான படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்பட்டன.” எனவும் சுட்டிக்காட்டினார்.
” இன்றைக்கும் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு, ” நாங்கள் சர்வதேசம் செல்ல தயாரில்லை எனவும், உள்நாட்டு பொறிமுறைக்கமைய விடைகொடுப்போம் எனவும் கூறிவரும் அரசு, இன்னும் ஒரு விடையையும் கொடுக்காமல் உள்ளது. ஆனால் இழப்பீட்டுக்காக வெளிநாட்டு நீதிமன்றத்துக்கு செல்கின்றது, இது உங்களுக்கடைய (ஆட்சியாளர்களின்) இனவாத முகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.” – எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றோம். TRC பற்றியும் (உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) கலந்துரையாடப்படும்.
TRC என்பது சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என எடுத்துரைக்கவுள்ளோம். அவ்வாறு இல்லாவிட்டால் அதில் பயன் இருக்காது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.