தமிழர் மீதான கரிசனை உண்மையானதாக இருக்க வேண்டும்
இலங்கைத் தமிழ் மக்கள் மீது காண்பிக்கப்படும் கரிசனை என்பது தேர்தல்காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி உண்மையானதாக அமையவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 'இந்தியா டுடே' ஊடக நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டுள்ளார். …