‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?
கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக தெரியவருகின்றது. துறைமுக நகரை மேம்படுத்துவதற்கான விழா அண்மையில் டுபாயில் நடைபெற்றது. 'கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் இது' என்ற தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.