You are currently viewing திட்டமிட்டப்படி தேர்தல் – உயர்நீதிமன்றுக்கு அறிவித்தது தே. ஆணைக்குழு!

திட்டமிட்டப்படி தேர்தல் – உயர்நீதிமன்றுக்கு அறிவித்தது தே. ஆணைக்குழு!

உள்ளாட்சிமன்ற தேர்தல் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளது.

உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு  கட்டளையினைக் கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ். துரைராஜா,  ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே தேர்தல் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தற்போது திட்டமிட்டுள்ள அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனுமீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply