You are currently viewing அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு!

அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு!

தமிழ்  தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சு நடத்த நாங்கள் இருக்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

” இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம்.அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.

ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேச்சு நடத்தியது. கோட்டபாய ராஜபக்சவுடனும் ஒரு தடவை பேசசு நடத்தியது. இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபடும்.” – எனவும் சிறிதரன் குறிப்பிட்டார்.

Leave a Reply