இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்தார்.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், மீண்டும் திகதி இடப் பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
” யுத்தத்தின் கடைசிப் பகுதியில் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான
வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன் றத்தில் நேற்று (17) வழங்கப்பட இருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் முதலாம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதி மன்றத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஜுலை மாதம் முதலாம் திகதி நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம்.” – எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
