You are currently viewing ‘ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிக்குமாறு ஆலோசனை முன்வைப்பு’

‘ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிக்குமாறு ஆலோசனை முன்வைப்பு’

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் குறுகிய காலத்தில்  ஒழிப்பதாக காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து,  அதைச்செய்து  – அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான  ஏற்பாடுகளை ஆளும் தரப்பு உடனடியாக முன்வந்து செய்ய வேண்டும். அப்படி செய்வது ஒன்றே இப்போதைய அரசியல் நெருக்கடிகளைச் சுமுகமாகத் தீர்த்து நாடு மீண்டெழுவதற்கு ஒரே வாய்ப்பாகும். 

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று (11) நேரடியாகச் சந்தித்து  அவருக்கு ஆலோசனை வழங்கினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ.சுமந்திரன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பின் அழைப்பின் பெயரில் நேற்றிரவு ஏழு

7.30 மணி முதல் 8 30 மணி வரை அவரது அலரி மாளிகை இல்லத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசினார் சுமந்திரன் எம்.பி.

உதவியாளர்கள் எவருமின்றி நேரடியாக இருவருமே மனம் விட்டுப் பேசினர் என்று தெரிகின்றது. பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம் ஊடாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. 

அரசுத் தரப்பில் இது பற்றிக் கசிந்த செய்தி குறித்து சுமந்திரனிடம் கேட்டபோது சந்திப்பை அவர் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பதற்கு என்ன செய்யலாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினார். 

இப்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப் புகள் எல்லோருடனும் தான் ஊடாடி வரு கின்றமையை சுமந்திரன் பிரதமருக்குச் சுட்டிக்காட்டினார்.

நேற்று காலையில் கூட சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயங்கள் குறித்துத் தொலைபேசியில் நீண்டநேரம் தம்மோடு கலந்துரையாடினார் என்பதை தெரியப்படுத்தினார் சுமந்திரன்.

அதேபோல அனுர பிரியதர்ன யாப்பா உட்பட்ட சுயாதீன அணியினர் தம்மோடு பேச்சு நடத்தி இருப்பதையும், ஜே.வி.பி. மற்றும் வாசுதேவ தரப்பினரும் தம்மோடு உரையாடி வருகின்றமையும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் கட்சிகள், மலையக

கட்சிகளோடு தான் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றமையைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இன்றைய நிலையில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிக்கும் நடவடிக்கையை அரசுத்தரப்பு தானே  முன்வந்து முன்னெடுப்பதாக அறிவித்து, அதனை மேற்கொள்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்றார்.

அதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஏற்கனவே நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்சவே குறிப்பிட்டு இருக்கின்றார்  என்று சொன்னார்.

எனினும், அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். மக்கள் அவருக்கு கொடுத்த

ஆணையின் முடிவில்தானே அதைச் செய்யமுடியும் என்றார் பிரதமர். அதை சுமந்திரன் மறுத்துரைத்தார்எனத் தெரிகின்றது. 

மக்கள் ஆணைதான் இப்போது பிரச்சினையாகி உள்ளது. சர்ச்சைக்குள்ளாகியிருக்கிது. அதைவழங்கிய மக்கள் அதைத் திரும்பப்பெற்று விட்டோம் என்பதைத்தெரியப்படுத்தவே வீதிக்கு இறங்கியுள்ளனர்.

ஆகவே மக்கள் ஆணை என்ற வாதம் சரிப்பட்டு வராது. ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒரு நாளில் ஒழித்துவிட முடியாது என்

பது உண்மைதான். அதற்கு சில மாதங்கள் தேவைப்படலாம்.  குறிப்பிட்ட மாதக் கணக்கில் அதை செய்வோம் என்று ஆளும் தரப்பு அறிவிக்கவேண்டும், அதன் முடிவில் பொதுத் தேர்தலை நடத்தி, அதிகாரத்தை யார் பயன்படுத்துவது என்பதை

மக்கள் ஆணை மூலம் அறிந்து கொள்ளலாம். அதனை மக்களுக்கு அரசு இப்

போது பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் இவற்றைச் செய்வதாக பிரகடனப்படுத்தி, ஏனைய கட்சிகளோடு சேர்ந்து அதை முன்னெடுக்க அரசு முன்வந்தால்தான் இப்போதைய நெருக்கடி தீரும். பிரச்சினை தணியும் சூழலும் ஏற்படும். ஜனாதிபதிக்கும் கெளரவமாக – நாட்டைப் பீடித்த தவறான ஆட்சி முறைமைக்கு முடிவு கட்டியவர் என்ற பெயரோடு

– பதவியில் இருந்து இறங்க வாய்ப்புக்கிட்டும் என்றார் சுமந்திரன்.

இந்த விடயங்கள் குறித்துத் தாம் ஜனாதிபதியோடு கலந்துரையாடி ஒரு முடிவை

எடுப்பார் என்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமிழர் தரப்போடு – தமிழ்த் தேசி

யக் கூட்டமைப்போடு – அரசு நடத்திய பேச்சுக்கள் குறித்தும் சுமந்திரன் பிரதமரிடம் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் முரண்பாடு இருக்கத்தக்கதாக நாங்கள்

உங்களோடு பேச வந்தோம். அந்தப் பேச் சில் எடுக்கப்பட்ட முடிவுகளையாவது – நீங்கள் இணங்கிய விவகாரங்களையாவது – உடனடியாக நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும் என்று சுட்டிக் காட்டினார் சுமந்திரன்.

இன்றைய நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையையாவது இந்த

சித்திரை வருடப் பிறப்புக்கு முன்னர் நீங் கள் செய்திருக்க முடியும். தவறி விட்டீர்

கள். குறைந்தபட்சம் அதில் சிரத்தை எடுத்து வெசாக் தினத்தையயாட்டியாவது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். அன்று வாக்குறுதி தந்த ஏனைய

விடயங்களையும் நிறைவு செய்யுங்கள் என்றார் சுமந்திரன்.

நிச்சயமாக இவற்றை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டி அரசியல் கைதிகள் விடயம்

உட்பட ஏனைய விடயங்களில் உடனடி நடவடிக்கைகளுக்குத் தாம் ஏற்பாடு செய் வார் என்றார் பிரதமர்.

தொடர்ந்தும் சுமந்திரனுடன் கலந்து ஆலோசனைப் பேச்சுகளை நடத்துவதற்கு பிரதமர் விருப்பம் தெரிவித்தார் எனத் தெரிகிறது. 

நிறைவேற்று அதிகார ஆட்சி முறை மையை ஒழிக்கும் ஏற்பாட்டுக்கு ஆட்சித் தலைமைப் பீடம் இணங்குமானால் சுமந்திரனின் கலந்தாலோசனை தொடர்ந்து பெறப்படும் எனத் தெரிகிறது