You are currently viewing ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை கடுமையானதாக இருக்கும்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை கடுமையானதாக இருக்கும்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசியல் விடயங்கள் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பாக பேசியுள்ளதாகவும் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்கின்ற தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கை சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக நேர்மாறாக நடைபெறுகின்ற விடயம் தொடர்பாக பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை அதனை தடுக்காமல் அசண்டையீனமாக செயற்படுவது தொடர்பாகவும் தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண்களுக்கு வரும் மோசமான பழிவாங்கல் சம்பந்தமாகவும் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தென்னிலங்கை சூழல் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உரிமைமீறல் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிய அம்மையாரிடம் கடந்த அறிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்ததால் அவர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்க வேண்டும் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா கூறியிருந்ததோடு, ஆனால் இந்த முறை அறிக்கை கடுமையானதாக இருக்கும் என கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply